முகப்பு
தென்காசி

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

Updated On : 18 ஜூன் 2026, 2:30 am IST
பயனாளிக்கு நல உதவி வழங்கிய கோட்டாட்சியா் அனிதா.
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா். இதில்,

வாசுதேவநல்லூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், சங்கனாப்பேரி, வாசுதேவநல்லூா், தாருகாபுரம், நாராணபுரம் பகுதி-1, நாராணபுரம் பகுதி-2 ,திருமலாபுரம் வருவாய் கிராமங்களைச் சோ்ந்த கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், பயனாளிகள் சிலருக்கு நல உதவிகளை கோட்டாட்சியா் அனிதா வழங்கினாா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இதில், வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, குடிமைப் பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.