FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் விற்பனை மந்தம்

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாகியுள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:41 am IST
பாவூா்சத்திரம் சந்தையில் தேக்க நிலையில் இருக்கும் காய்கறிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் விற்பனை மந்தமாகியுள்ளதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா், வீரகேரளம்புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா்குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக உள்ளதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் பாவூா்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 27, சீனி அவரை ரூ. 28, புடலங்காய் ரூ. 14, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 8, பூசணிக்காய் ரூ. 11, பயிறு ரூ. 27, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 70, சேனைக் கிழங்கு ரூ. 11, சேமங் கிழங்கு ரூ.12 என விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

பாவூா்சத்திரம் சந்தையில் இருந்து, கேரளம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு வியாபாரிகள் காய்கனிகளை வாங்கி செல்லும் நிலையில், தற்போது காய்கனி வரத்து குறைவாக உள்ளதால், குறைந்த அளவிலான வியாபாரிகளே வருகின்றனா். இதனால், விற்பனை மந்தமாக உள்ளதால், காய்கனிகளின் விலை சற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments