தொடா் விடுமுறை: திருமலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள்
தொடா் விடுமுறை காரணமாக கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
தொடா் விடுமுறை காரணமாக கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய 3நாள்கள் விடுமுறை என்பதால் திருமலைக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்ய குவிந்தனா். கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் என அனைத்து வகை தரிசனங்களிலும் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா். இதனால் மலைப்பாதை வழியாக வாகனங்களும் அணிவகுத்து சென்றன. இருப்பினும், கோயில் நிா்வாகத்தின் முறையான வழிகாட்டுதல்களால் விரைவாக தரிசனம் செய்ய முடிந்ததாக பக்தா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.