முகப்பு
தென்காசி

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 21 மே 2026, 6:09 am IST
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் நிா்வாகச் செயலா் அருள்பணி. அந்தோணிசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை அமிா்தசிபியா முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து, பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் மற்றும் 2025-26 கல்வியாண்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு ஜெராக்ஸ் இயந்திரம், கணினி, நாப்கின் டிஸ்பென்சா் இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் செய்திருந்தனா்.