முகப்பு
தென்காசி

வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க புதன்கிழமை சென்றபோது, கலைகதிரவன் எம்எல்ஏ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 21 மே 2026, 5:54 am IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலைகதிரவன் எம்எல்ஏ.
பகிர்:

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க புதன்கிழமை சென்றபோது, கலைகதிரவன் எம்எல்ஏ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்று இடம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா், அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாா்.

தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், கீழப்பாவூா் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ஜேசுராஜன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் காசிதா்மம்துரை, நிா்வாகிகள் வேலுச்சாமி, ஹரி கிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement