கல்லூரியில் கணினிக் கலை விழா
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கணினிக் கலை விழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கணினிக் கலை விழா அண்மையில் நடைபெற்றது.
கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுடபத் துறை, கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு. முகம்மதுசாதிக் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஏ. அப்துல்காதர் வாழ்த்தினார். பேராசிரியர் என். ராவியா ஷப்னம் சிறப்புரையாற்றினார்.
வார்த்தை வேட்டை, மென்பொருள் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் கே. செந்தாமரை கண்ணன் பரிசுகளை வழங்கிப் பேசினார். பேராசிரியர்கள் செய்யது முகம்மது, பிரமுகைலாசம், சாஹித் உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.