முன்னீர்பள்ளம் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் சாவு
முன்னீர்பள்ளம் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
முன்னீர்பள்ளம் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
மேலச்செவலைச் சேர்ந்த முப்பிடாதி மகன் பிரம்மராஜ் (35). லாரி கிளீனர். இவர், அடைமிதிப்பான்குளம் பகுதியில் ஒரு குவாரியில் வேறு ஒருவரின் லாரியை பழுதுபார்க்கும் பணியில் சம்பவத்தன்று ஈடுபட்டாராம். அப்போது லாரி நகர்ந்ததால் பின்சக்கரத்தில் சிக்கிய பிரம்மராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் மூன்னீர்பள்ளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.