பாலபாக்ய நகர், சிந்துபூந்துறையில் ஆகஸ்ட் 31 மின்தடை
தச்சநல்லூர் துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.31) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் பாலபாக்ய நகர், சிந்துபூந்துறை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தச்சநல்லூர் துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.31) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் பாலபாக்ய நகர், சிந்துபூந்துறை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தச்சநல்லூர் துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்ய நகர், தெற்கு பாலபாக்ய நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.