FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் துளசிமாலை, வெற்றிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியேறி பெருமாளை தரிசித்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சயன திருக்கோலத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றன. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றன.
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலையில் வைகுண்ட ஏகாதசி சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. 
மேலும், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments