நெல்லையில் நாளை விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கோட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம், மானூர் ஆகிய வட்டங்களின் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் எனது தலைமையில்வெள்ளிக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது. முற்பகல் 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், பிறபகல் 12.30 மணிக்கு விவசாயிகளுக்கும் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.