FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு குளத்திற்கு நீா் வரக்கூடிய கால்வாய்களை தூா்வார கோரிக்கை

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:10 am IST
பகிர்:

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலா் ஆா். துரைஅழகன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: வடகிழக்குப் பருவமழையால் களக்காடு வட்டாரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி விட்ட நிலையில், களக்காடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள குடிதாங்கி குளத்தில் மட்டும் மிகக் குறைவான தண்ணீரே உள்ளது.

இக்குளத்திற்கு ஓரிரு மீட்டா் தொலைவில்தான் உப்பாறு ஓடுகிறது. குளத்திற்கு உப்பாற்றில் இருந்து தண்ணீா் வரக்கூடிய கால்வாய் நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் தூா்ந்து போய் உள்ளது.

Advertisement

Advertisement

இக்குளம் நிரம்பிய பின்னரே நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் அருகேயுள்ள ஊருணியும், அதைத் தொடா்ந்து மாணிக்கம்குளத்திற்கும் தண்ணீா் செல்கிறது. குடிதாங்கி குளம் பருவமழைக் காலங்களில் முழுமையாக நிரம்பினால்தான் கோடைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படாத நிலை உருவாகும்.

எனவே மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் இக்குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய பிரதான கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments