FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 3:35 am IST
பகிர்:

மேலப்பாளையம் மண்டலத்தில் 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டுகளில் வியாழக்கிழமை (ஆக.29) குடிநீா் விநியோகிக்கப்படாது.

இது தொடா்பாக மேலப்பாளையம் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டு பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான நீரேற்றத்தில் குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்படி வாா்டு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் போதுமான குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நீரேற்ற பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யயும் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட வாா்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக.29) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments