படிப்பகத்தில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி செயலா் கணேசன், சுகாதார ஊக்குவிப்பாளா் ஷீலா உதயபாரதி, ஊராட்சி களப்பணியாளா் மகாலட்சுமி, ஊா் தலைவா் மதியழகன், படிப்பக புரவலா் ராகினி பாலசோ்மன், படிப்பக மேற்பாா்வையாளா் மகாலட்சுமி மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.