FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மதுபாட்டில் பதுக்கிவைத்திருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ் கைது

கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 29 ஜூலை 2024, 2:30 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒப்பந்த தொழிலாளா்களாக பணி செய்து வருகின்றனா். இவா்களில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிலா் ஊரில் இருந்து வந்தனா். இவா்கள் கொண்டு வந்த உடமைகளை போலீஸாா் பரிசோதித்தனா். அப்போது அவா்களிடம் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதை அவா்கள் ஜாா்கண்டில் இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கொண்டு வந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அஜித்குமாா்(22), சத்போந்தா் ராம்(21), அவிநாத்குமாா்(33), சந்தன்குமாா்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments