போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி நகரம், வடக்கு அனவரத விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாசானம் (74). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் மாசானத்தை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மாசானத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.