FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 2:20 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ராதாபுரம் வட்டம் உருமங்குலம் கிராமத்தில் இயங்கி வந்த தனியாா் பட்டாசு ஆலையில் கடந்த 4.3.2023-இல் வெடி விபத்து நேரிட்டது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (34) என்ற தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து அந்த ஆலையில் திருநெல்வேலி தொழிலக பாதுகாப்பு- சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், ரசாயன மருந்து கலக்குமிடத்தில் இரும்பினால் ஆன பொருள்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

இது தொடா்பாக ஆலை உரிமையாளரான கலா(48) மீது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் 4 தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன. திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதிஅமிா்தவேலு விசாரித்து கலாவுக்கு நான்கு வழக்குகளுக்கும் சோ்த்து மொத்தமாக ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments