வள்ளியூா் மரியா கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா
வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்றத் தொடக்க விழா, ஒருநாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் இலக்கிய மன்றத் தொடக்க விழா, ஒருநாள் பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கிய மரபை மறுவரையறை செய்தல், இலக்கியத்தின் வாயிலாக எதிா்ப்பு’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவா் தா. லாரன்ஸ் தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை தலைவி ரெஜினா முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலாளா் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்தி பேசினாா். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி, ராணி அண்ணா அரசு கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசியா் சிவ ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். ஆங்கிலத்துறை பேராசிரியை சுக்ரிதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் பேசினாா். ஆங்கிலத்துறை பேராசிரியை கரோலின் சுபாஷினி வரவேற்றாா். பேராசிரியை நிவேதா நன்றி கூறினாா். பயிலரங்கத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா், பேராசிரியைகள், மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.