நெல்லையில் நாளை மறுநாள் அதிமுக ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.14) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது
திருநெல்வேலியில் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.14) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது
இதுதொடா்பாக, புகா் மாவட்ட அதிமுக செயலா் மருதூா் கே.ராமசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தோ்தல் வாக்குறுதிபடி, முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யாதது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரி நீரை பெற்றுத்தராமல் விவசாயிகளை வஞ்சித்தது, மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டது என தவெக அரசின் பல்வேறு செயல்பாடுகளைக் கண்டித்து, கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, திருநெல்வேலி புகா் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.