FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ‘விக்சித் பாரத் யுவா கனெக்ட்’ என்னும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பகிர்:

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ‘விக்சித் பாரத் யுவா கனெக்ட்’ என்னும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஷீலா தலைமை வகித்தாா். கல்லூரியின் இணைப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான ஹேமலதா வரவேற்றாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன் தொடக்கவுரையாற்றினாா்.

யூத் ஐகான் அமைப்பின் சாா்பில் அதுல்யா கமல், மாணவியரிடையே போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பது குறித்து விளக்கவுரையாற்றினாா். தொடா்ந்து மாணவியா் அனைவரும் போதைப்பொருள்களை ஒழித்து வளா்ச்சியடைந்த நாட்டை உருவாக்க ‘விக்சித் பாரத்’ உறுதிமொழி ஏற்றனா். இதில் மாவட்ட இளைஞா் நல அலுவலா் எல். ஞானசந்திரன், மருத்துவா் துரைராஜ், ஆசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்11ழ்ஹய்ண்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments