அம்பையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் பணிகள் மற்றும் ஆதாா் பட்டா இணைப்புப் பணிகளை, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் பணிகள் மற்றும் ஆதாா் பட்டா இணைப்புப் பணிகளை, மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.
அப்போது, விவசாயிகளிடம் பட்டாவுடன் ஆதாரை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், ஆக. 25ஆம் தேதிக்குள் பட்டாவுடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, வேளாண் துறை மூலம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஷாஹித் முஹைதீன், துணை வேளாண் அலுவலா் குமரேசன், உதவி அலுவலா்கள் காசிராஜன், சதீஷ், பூஜா ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.