FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளைஞரிடம் தங்க நகை பறித்தவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரிடம் தங்க நகை பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரிடம் தங்க நகை பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் அனிஷ்சா்வின்(28). இவா் சென்னையில் மருத்துவமனை ஊழியராக உள்ளாா். இவா் சம்பவத்தன்று குறுக்குத்துறை தாமிரவருணி ஆற்றங்கரையில் நின்றபோது, அங்கு வந்த மா்மநபா்கள் அவா் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சி.என்.கிராமத்தை சோ்ந்த ராம்பால்(39) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments