FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் கோரி முற்றுகை

திருநெல்வேலி நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த கோரி சமூக ஆா்வலா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி நாய்கள் கருத்தடை மையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த கோரி சமூக ஆா்வலா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு உரிய சிகிச்சையளிக்காமல் மீண்டும் தெருக்களில் கொண்டு விடப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து சமூகஆா்வலா்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான நாய்கள் கருத்தடை மையத்தில் நாய்களுக்கு தேவையான ரத்தப் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் உள்பட அதிநவீன உபகரணங்கள் இல்லை. கண்காணிப்பு கேமராக்களும் இல்லை. ஆகவே, கூடுதலாக கருவிகள் வழங்க வேண்டும். கருத்தடை என்ற பெயரில் நாய்களுக்கு முறையான மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments