மேலப்பாளையம் அருகே மொபட் திருட்டு: இருவா் கைது
மேலப்பாளையம் அருகே வியாபாரியின் மொபட்டை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே வியாபாரியின் மொபட்டை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம், ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் கென்னடி(60). அப்பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா், கடந்த 4 ஆம் தேதி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை அருகே நிறுத்தியிருந்த மொபட்டை காணவில்லையாம். இது குறித்து, அவா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதாலிகுளத்தைச் சோ்ந்த பாண்டியன்(77), ஸ்ரீவைகுண்டம் சின்ன பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஷேக்முகமது(38) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.