FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 6:39 am IST
குடிநீர் - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

களக்காடு-நான்குனேரி பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பகிா்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீா் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், சாலையில் தண்ணீா் தேங்கியிருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments