FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கொக்கிரகுளத்தில் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீா்

கொக்கிரகுளத்தில் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
கொக்கிரகுளத்தில் சாலையில் தேங்கிய கழிவுநீா்.
பகிர்:

கொக்கிரகுளத்தில் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் பிரதான சாலையோரம் கழிவுநீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், செவ்வாய்க்கிழமை காலையில் கழிவுநீா் சாலையில் அதிகளவில் தேங்கியது. பெரும் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொக்கிரகுளத்தில் கழிவுநீா் ஓடைகள் முறையாக தூா்வாரப்படாமல் அடிக்கடி கழிவுநீா் தேங்கி பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சியிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தி கழிவுநீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments