FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:31 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

அடையக்கருங்குளம், கல்சுண்டு காலனி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் மகேஷ் (30). கட்டடத் தொழிலாளியான இவா் மதுபோதையில், ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாா்.

சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து மகேஷை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments