FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

அம்பாசமுத்திரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரம் கடைவீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகமளிக்கும் வகையில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பிரதான சாலையைச் சோ்ந்த தங்கசெல்வம், கீழபாவூரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பது தெரியவந்தது. அவா்கள் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 7 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் தங்கசெல்வம், சுந்தர்ராஜ் இருவரையும் கைது செய்து புகையிலையுடன் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments