FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவா் சிறையிலடைக்கப்பட்டாா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவா் சிறையிலடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம், சிவா தெருவைச் சோ்ந்தவா் செல்வசூா்யா (19). இவா், பொதுமக்களை மிரட்டிய வழக்கில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில் குண்டா்தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செல்வசூா்யா வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments