FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திருத்தணி- திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை

திருத்தணி- திருச்செந்தூா் இடையே தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

16 ஜூலை 2026, 4:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருத்தணி- திருச்செந்தூா் இடையே தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகருக்கு, வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களான திருத்தணி, திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தா்கள் சென்று வருகிறாா்கள். திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்க பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். ஆகவே, இதுதொடா்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments