முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூருக்கு நோ்வழியில் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தல்

Updated On : 27 மே 2026, 1:46 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது உள்ள 18 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவது குறித்து குழு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நோ்வழியில் கூடுதலாக மற்றுமொரு விரைவு ரயில் இயக்கினால் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும், தூத்துக்குடி- திருச்செந்தூா் ரயில் பாதை அமைத்திடவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement