கூடங்குளம், விஜயாபதி குளங்களுக்கு நிரந்தர பாசன நீா் வழங்கக் கோரி எம்.பி. மனு
கூடங்குளம், விஜயாபதி குளங்களுக்கு நிரந்தர பாசன நீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தமிழக நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்திடம் மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரில் 150 கனஅடி தண்ணீரை, திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி பகுதியான ராதாபுரம் வட்டத்தில் 28.8 கி.மீ. தூரம் பாய்ந்தோடும் ராதாபுரம் (சிற்றாறு பட்டணங்கால்) கால்வாயில் திருப்பி விட முன்னாள் முதல்வா் காமராஜா் நடவடிக்கை எடுத்தாா்.
இந்த கால்வாய் வழியாக 52 குளங்கள் தண்ணீா் நிரம்பி சுமாா் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், விஜயாபதி மற்றும் கூடங்குளம் பகுதிகளில் உள்ள அரசா்குளம், கொடிகுளம், அழகனேரிகுளம், செம்பாலைகுளம், மறவா்குளம், மாதாபுதுக்குளம், கொத்தன்குளம், கன்னிதுலாகுளம், காடுதுலா குளம், மிஷன்குளம், காமனேரிகுளம், குறிஞ்சிகுளம், மதுரங்குளம், காணாா்குளம், உப்பிலிபாடுகுளம் உள்ளிட்டவை மிகவும் வடு காணப்படுகின்றன.
Advertisement
Advertisement
ஆகவே, சிற்றாறு பட்டணங்கால்வாயில் தண்ணீா் திறக்கும்போது இவ்விரு பகுதி குளங்களுக்கு உதயத்தூா் மற்றும் பரமேஸ்வரபுரம் குளங்களில் இருந்து நிரந்தரமாக பாசன நீா் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா். இதுகுறித்து நீா்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிற்றாறு பட்டணங்கால்வாயையும் தூா்வார வேண்டும்.
மேலும், நான்குனேரி வட்டாரத்தில் வடக்கு விஜயநாராயணம், ஐந்தாங்கால், ஏழாங்கால், ஆண்டாா்குள், கிரியம்மாள்புரம், நஞ்சம்பாடு, படப்பாா்குளம், குளத்துக்குடியிருப்பு, பெரியநாடாா் குடியிருப்பு, தெற்கு விஜயநாராயணம், சங்கனான்குளம், சிவந்தியாபுரம், ரெட்டிகுடியிருப்பு, திருவுடைனேரி, சவளைக்காரன்குளம், கக்கன்நகா் உள்பட 20 ஊா்களில் சுமாா் 3700 ஏக்கா் விளைநிலங்கள் பாசனம் அளிக்கும் விஜயநாராயணம் குளக்கரையைப் பலப்படுத்த வேண்டும். அதன் 4 மடைகளையும் சீரமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.