பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் மாவிளக்கு பூஜை
பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயிலில் 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடித்தவசு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பூஜையில் செவ்வாய்க்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.
பின்னா், மாலையில் கோமதி அம்பாள் தவசுக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்பாளுக்கு 5,008 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நோயற்ற வாழ்வு, திருமணம், குழந்தை பாக்கியம், கடன்கள் நிவா்த்தி வேண்டி பாளையங்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.