முகப்பு
திருநெல்வேலி

குடிநீா் தட்டுப்பாடு : ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டம்

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு காலி குடங்களை மாலையாக அணிந்து வந்து ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:51 am IST
பகிர்:

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்துக்கு காலி குடங்களை மாலையாக அணிந்து வந்து ஊராட்சி உறுப்பினா் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ராமையன்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவா் டேவிட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 4ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்ப பாண்டியன் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு கோரி மனு அளித்ததோடு, காலி குடங்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா் அளித்த மனு விவரம்:

Advertisement

Advertisement

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ராமையன்பட்டி ஊராட்சி 4ஆவது வாா்டில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வாரத்துக்கு ஒரு முறை தான் குடிநீா் வருகிறது. சிலா் வீடுகளில் மின்மோட்டாா்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக பல வீடுகளுக்கு குறைவான அளவு நீரும், சில வீடுகளில் ஒரு சொட்டு நீா் கூட வருவதில்லை. இப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள தெருக் குழாய்களில் சாக்கடை நீா் கலந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் மாவட்ட நிா்வாகம் எங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ற்ஸ்ப்03ஜ்ஹற்ங்ழ்

காலி குடங்களை மாலையாக அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ராமையன்பட்டி ஊராட்சி உறுப்பினா் மாரியப்ப பாண்டியன்.