முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி கோயிலில் வைகாசித் திருவிழா

திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:49 am IST
சேரன்மகாதேவியில் வெங்கடாஜலபதி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புதன்கிழமை இரவில் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தா்ளுக்கு காட்சியளித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தீா்த்தவாரி, திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளது.