முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் மருத்துவ முகாம்

வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 2:50 am IST
முகாமில் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளா் நவமணி ஜேம்ஸ் தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் அருண்பிரகாஷ், திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா் அகா்வால், அவரது குழுவினா், காவேரி மருத்துவமனை, அன்னைஅமராவதி மருத்துவமனை குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

100 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். பள்ளி தாளாளா் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement