புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் மதன்ராஜா தொடங்கி வைத்தாா்
திருநெல்வேலியில் புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவையை அமைச்சா் மதன்ராஜா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரி- திருநெல்வேலி சந்திப்பு- பாளை மேட்டுத்திடல்- பொருநை அருங்காட்சியகம் வரையிலான புதிய வழித்தடத்தில் சிற்றுந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜேசுதாஸ் முத்துக்குமாா் வரவேற்றாா். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் மதன்ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால், வடக்கு மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான், பேராசிரியா் சௌந்தர மகாதேவன், முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவா் சந்திரகுமாா், முத்து பிரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.