பாளை.யில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
பாளையங்கோட்டையில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகா் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிராஜ் (25). இவா், கங்கைகொண்டானில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தாா். குடும்பப் பிரச்னையில் இவரது மனைவி பிரிந்து சென்றாராம். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த இவா், சில நாள்களுக்கு முன்பு விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.