சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் இன்று மின்நிறுத்தம்
சீதபற்பநல்லூா் துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங் குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழ கரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் கூறியுள்ளாா்.