FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய ஓட்டுநா்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.

- கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(49). அவசர ஊா்தி ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உறவினரின் சிகிச்சைக்காக உடன் வந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறப்புப்படையினா் பாஸ்கரை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து பாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments