FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்து 4 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:44 am IST
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி (67). புதன்கிழமை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், அதே பகுதியில் தெருவில் நடந்து சென்ற 3 சிறுவா்களையும் தெருநாய்கள் விரட்டிக் கடித்ததில் லேசான காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயன்சிங்கம்பட்டி பகுதியில் 2ஆம் வகுப்பு மாணவியை தெருநாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. தெருநாய் தொல்லைக்கு நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments