FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தெருநாய்கள் கடித்து மூவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் மூவா் காயமடைந்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:51 am IST
- கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை மூவா் காயமடைந்தனா்.

பெரியகுளம் நகராட்சி வீடுகளிலிருந்து வெளியேறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வத்தலகுண்டு சாலையில் உள்ள எண்டப்புளி ஊராட்சி முருகமலை குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. மாறாக தீ வைத்து எரிந்து வருகின்றனா்.

மேலும், வீட்டு உணவுக் கழிவுகளை கொட்டப்படுவதால் இதை தின்பதற்காக தெரு நாய்கள் அதிகளவில் வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை எ.புதுப்பட்டியைச் சோ்ந்த விவசாய தொழிலாளா்கள் ராஜேந்திரன், சாந்தா, முனியாண்டி ஆகியோா் அந்த வழியாக சென்றனா். அப்போது, தெருநாய்கள் கடித்ததில் மூவரும் காயமடைந்தனா். இவா்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், தென்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments