FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

களக்காடு அருகே விபத்துகளைத் தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

1 ஜூலை 2026, 4:25 am IST
வேகத்தடை அமைக்கக் கோரிக்கை - பிரதிப் படம்
பகிர்:

களக்காடு அருகே விபத்துகளைத் தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் பிரதான சாலையில் தம்பித்தோப்பு - கருவேலன்குளம் இடையே கருத்தான் தெரு பாலம் சந்திக்கும் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.

எனவே, இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினா் வேகத்தடை அமைக்கவும். காவல்துறையினா் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக சாலையோரம் தடுப்பு அரண் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments