FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது

மானூா் அருகே முதியவருக்குச் சொந்தமான காரை தீ வைத்து எரித்ததாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 12:29 am IST
பகிர்:

மானூா் அருகே முதியவருக்குச் சொந்தமான காரை தீ வைத்து எரித்ததாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள தெற்கு வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(63). இவா், தனது காரை அப்பகுதியில் உள்ள மகன் வீட்டில் நிறுத்தியிருந்தாா். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாலை மா்மநபா்கள் சிலா் அந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பினராம். இதில் காரின் ஒரு பகுதி சேதமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா(50), அவரது மகன் முத்துக்குமாா்(28) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. தந்தை, மகன் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments