FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாத்தான்குளம் நீதிமன்ற புதிய கட்டடம்: நீதிபதிகள் ஆய்வு

சாத்தான்குளத்தில்  கட்டப்பட்டுள்ள  புதிய நீதிமன்றக் கட்டடம் திறக்கப்பட  உள்ளதையடுத்து, அக்கட்டடத்தை நீதிபதிகள்  திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

சாத்தான்குளத்தில்  கட்டப்பட்டுள்ள  புதிய நீதிமன்றக் கட்டடம் திறக்கப்பட  உள்ளதையடுத்து, அக்கட்டடத்தை நீதிபதிகள்  திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 
புதிய நீதிமன்றக் கட்டடத்தை  திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வழக்குரைஞர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து  புதிய கட்டடத்தை மாவட்ட  உரிமையியல் நீதிபதி சிவாஜிசெல்லையா, குற்றவியல் நீதிபதி சரவணன் ஆகியோர்  திங்கள்கிழமை  பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதில்,  அரசு  வழக்குரைஞர் ஏ.ஆர்.பி.டி. கல்யாண்குமார் மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் பலர்  கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments