விஜயராமபுரம் பள்ளியில் இருபெரும் விழா
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரபிள்ளை
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா, சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரபிள்ளை பிறந்த தினவிழா ஆகிய இருபெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி. ஜெகதீசபாண்டி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர்கள் எஸ். செல்வஜோதி,ஆர். பார்வதி, ஆர். நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஆர்.கனகா வரவேற்றார்.
பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி மேலாளர் ரமேஷ்குமார், ஆசிரியை நந்தினி ஆகியோர் பரிசு வழங்கினர். உதவி ஆசிரியர் எஸ்.சணமுகராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.