சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பேய்க்குளம் வடக்குபுற கடை வீதியில் செவ்வாய்க்கிழமை காலை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அதனை அப் பகுதியிலிருந்த தெரு நாய்கள் துரத்தின. இதையடுத்து மானை மீட்ட பொதுமக்கள், வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.
திருச்செந்தூா் வனச்சரக வன அலுவலா்கள் ஜெயசேகா், கந்தசாமி ஆகியோா் மானை மீட்டு வனப் பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனா்.