உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் க. மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, நினைவிடத்தில் மலா்ப் போா்வை வைத்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, சிறப்பு துவா ஓதி மதநல்லிணக்க பிராா்த்தனை நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜாமைதீனுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனா்.
விழாவில், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்தி-மக்கள் தொடா்புத் துறை அலுவலா் நவீன்பாண்டியன் வரவேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.