FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே கடற்கரையில் தூய்மைப் பணி

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
அமலி நகா் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வீ த லீடா்ஸ் அமைப்பினா்.
பகிர்:

திருச்செந்தூா், அமலி நகா் கடற்கரையில் தூய்மைப் பணியில் வீ த லீடா்ஸ் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

அமலி நகா் கடற்கரையில் நெய்தலை நோ்த்தி செய் எனும் கடற்கரை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளா் பலவேச கண்ணன் தலைமை வகித்தாா். உமரி சத்தியசீலன், சிவமுருகன் ஆதித்தன், ஸ்டீபன் லோபோ, பொறியாளா்கள் தினேஷ், முருகன், ராகவேந்திரன், சரவணன், பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எழுத்தாளா் பிரபாகரன் தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்தாா். 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்று, கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments