தூத்துக்குடியில் இன்று நடைபெற இருந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-க்கு மாற்றம்
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெறவிருந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூா் விடுமுறை காரணமாக இம்மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெறவிருந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூா் விடுமுறை காரணமாக இம்மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது.
கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவையொட்டி இம்மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்பு முகாம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என, மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.