தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு மீட்பு
தூத்துக்குடி, முத்தையாபுரம் பாதசாரிகள் பூங்கா அருகே உள்ள உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் குப்பைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றபோது, தேங்கியிருந்த நீா்ப் பகுதியில் எலும்புக் கூடு இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீஸாா் எலும்புக் கூட்டைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.